search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் அதிகாரி சஸ்பெண்டு"

    பிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட தேர்தல் பார்வையாளரை தேர்தல் கமிஷன் இடைநீக்கம் செய்தது. அதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. #PMModi #ElectionCommission #Congress
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 16-ந் தேதி ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் பிரசாரம் செய்ய சென்றார். அவரது ஹெலிகாப்டர் தரை இறங்கியவுடன், ஒடிசா மாநிலத்துக்கான தேர்தல் பார்வையாளர் முகமது மொசின், அந்த ஹெலிகாப்டரை சோதனையிட்டார்.

    இந்த சோதனையால், பிரதமர் மோடி சுமார் 15 நிமிடங்கள் அங்கேயே இருக்க வேண்டியதாகி விட்டது.

    இந்நிலையில், முகமது மொசினை தேர்தல் கமிஷன் பணி இடைநீக்கம் செய்துள்ளது. இதுதொடர்பாக தேர்தல் கமிஷன் பிறப்பித்த உத்தரவில், “கருப்பு பூனைப்படை பாதுகாப்பில் உள்ளவர்கள் தொடர்பாக தேர்தல் கமிஷன் பிறப்பித்த வழிகாட்டுதல்களுக்கு முரணாக செயல்பட்டதற்காக கர்நாடக பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரி முகமது மொசின் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.



    “கருப்பு பூனைப்படை பாதுகாப்பில் உள்ளவர்களுக்கு சோதனையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, பிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்டது, தேர்தல் கமிஷன் வழிகாட்டுதல்களுக்கு எதிரானது” என்று தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இதற்கிடையே, இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பிரதமரின் ஹெலிகாப்டரில் இருந்து ஒரு மர்ம பெட்டி இறக்கப்பட்டதாக செய்தி வெளியானநிலையில், எல்லா ஹெலிகாப்டர்களிலும் சோதனை நடத்தப்படும் என்று எதிர்பார்த்தோம். பிரதமரின் ஹெலிகாப்டருக்கு விலக்கு அளிக்கப்படவில்லை. ஆனால், பிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்டு, கடமையை செய்த தேர்தல் பார்வையாளரை தேர்தல் கமிஷன் இடைநீக்கம் செய்துள்ளது.

    இதன்மூலம் பாரபட்சமாக செயல்பட்டுள்ளது. யாரும் பார்ப்பதை விரும்பாத அளவுக்கு ஹெலிகாப்டரில் மோடி அப்படி என்ன கொண்டு சென்றார்?

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #PMModi #ElectionCommission #Congress 
    ஒடிசா மாநிலத்தில் பிரசாரத்திற்கு பிரதமர் மோடி பயன்படுத்திய ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். #PMModi #ElectionCommission
    புதுடெல்லி:

    ஒடிசாவில் பாராளுமன்றம் மற்றும் சட்டசபைக்கு தேர்தல் நடைபெறுகிறது. எனவே பா.ஜனதா வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் ஒடிசா மாநிலத்தில் உள்ள சம்பல்பூருக்கு ஹெலிகாப்டரில் சென்றார்.

    அங்கு அவரது ஹெலிகாப்டரில் தேர்தல் அதிகாரி முகமது மோஷின் சோதனை நடத்தினார். இதுகுறித்து தேர்தல் கமி‌ஷனிடம் பிரதமர் மோடி புகார் செய்தார்.

    அதைத்தொடர்ந்து ஒரு நபர் விசாரணை குழுவை தேர்தல் கமி‌ஷன் ஒடிசாவுக்கு அனுப்பியது. விசாரணையின் முடிவில் மோடியின் ஹெலிகாப்டரில் சோதனை நடத்திய தேர்தல் அதிகாரி ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டார். அதற்கான உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்தது.

    சிறப்பு பாதுகாப்பு படையின் பாதுகாப்பை பெறும் பிரதமர் போன்றோருக்கு இத்தகைய சோதனையில் இருந்து விதிவிலக்களித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்திய தேர்தல்கமி‌ஷனின் அறிவுறுத்தலுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அவர் மீது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    கடந்தவாரம் சுந்தர்கர் பகுதியில் பிரசாரம் செய்த ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் மற்றும் மத்திய பெட்ரோலியம் துறை மந்திரி தர்மேந்திர பிரதான் ஆகியோரின் ஹெலிகாப்டரில் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    சஸ்பெண்டு ஆன தேர்தல் அதிகாரி முகமது மோஷின் கர்நாடகாவில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். இவர் தேர்தல் கண்காணிப்பாளராக ஒடிசாவில் பணி நியமனம் செய்யப்பட்டிருந்தார். #PMModi #ElectionCommission
    ×